நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும் புஷ்பவனம் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது குஜராத் கெமிக்கல் மேலாளர் சுந்தர்ராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கரியாம்பட்டினம் ஊராட்சி செண்பகராய நல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை திட்டம் திட்டத்தின் கீழ் தலா ரூ.26 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டும் பணிகள் மற்றும் கரியாபட்டினம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு பற்றியும் கிராம உழவர் சந்தையையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.