கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து நாயை தேடியுள்ளார். ஆனால் நாயை காணாததால் அவர் மீண்டும் காரில் ஏறி சென்றுள்ளார். அதன் பின் புத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் பயணம் செய்த அவர் காரின் பம்பரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் மெக்கானிக்கை வரவழைத்து காரின் பம்பரை கழற்றி  அதில் சிக்கியிருந்த நாய்க்குட்டியை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.