புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்திரா சாலை சதுக்கம் அருகே வந்த போது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றுள்ளது. அப்போது காரின் முன் பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென கார் தீ பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த நபர் இறங்கி வெளியே வந்துள்ளார். மேலும் சிக்னலில் நின்றபோது கார் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வாகன ஓட்டியின் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.