தமிழகத்திற்கென தனியாக கல்விக் கொள்கை வகுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக  அமைச்சர் பொன்முடி கூறினார். இதுபற்றி  பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாடு தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும்.

வெளிநாட்டிற்கு ஆங்கிலம், உள்ளூருக்கு தமிழ் என 2 மொழிகள் மட்டுமே போதும். இதை எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை மீறி இருமொழிக் கொள்கையை முதல்வர் நிச்சயம் செயல்படுத்துவார் என்றார்.