இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் சென்ற நிலையில் திடீரென பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட பல பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை. பஸ் பள்ளத்தாக்குக்குள் சென்றபோது இரண்டு மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ‌