புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஜூன் இரண்டாம் தேதி 14 மணி நேரம் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின்னழுத்த பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டநகர் துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.