தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று பேர் ஐசியூவில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல், குமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். ஆக்சிஜன் படுக்கைகளில் நாகையில் 6, சென்னையில் 4, சேலத்தில் 4, தூத்துக்குடியில் இரண்டு பேர் உள்ளனர் என்றும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.