தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  தமிழகத்தில் 100ல் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாக மருத்துவத்துறை தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. சென்னை, கோவை, திருச்சி என 10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் சென்னையில் மார்ச் 1ல் 0.4% பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது 7.9% பேருக்கு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கி இருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது.