அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக வருகிற 28-ஆம் தேதி வரை நீர் திறப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!
Related Posts
தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read moreஅறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ…. என்ன சொன்னாரு தெரியுமா…??
தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து…
Read more