கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

“வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்தத் துறையை மாற்றிக் கொடுத்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“>

 

மேலும், எப்போதுமே மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் தனது உண்மையான விருப்பம் என்றும் அவர் தனது பேட்டியில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.