தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத் என்பவர், குடிபோதையில் தனது மனைவி மற்றும் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது.
இவரது மனைவி சிரிஷா, குடிப்பேட்டையில் உள்ள 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்; அவர் தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு கதறி அழுதபோதும் ரவி பிரசாத் இரக்கமின்றித் தாக்கியுள்ளார்.
‼️ Trigger Warning ‼️
(The video is a shorter version of the original video)
The man in the video who is behaving like an animal and beating up his own wife and child is Constable Ravi Prasad, working with the Mancherial town police, Telangana.
His wife Shirisha works as… pic.twitter.com/9W8URzx4BQ
— Revathi (@revathitweets) February 3, 2026
“>
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரவி பிரசாத், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதால் தற்போது அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு காவலராகவும், உயர் சாதி ஆணாகவும் இருக்கும் ஆணவத்தில் அவர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
