பெங்களூருவில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகக் குடியேறி, இந்தியக் குடிமக்களுக்குரிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்களை முறைகேடாகப் பெற்றுத் தங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 1500 ரூபாய் லஞ்சம் கொடுத்து இவர்கள் ஆதார் கார்டுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசாங்கம் வழங்கும் சலுகைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, சாதாரணக் குடிமக்களைப் போலவே அவர்கள் அங்கு வசித்து வருவது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bangladeshi citizens are living in Bengaluru with voter IDs, Aadhaar cards, ration cards, driving licences, and bank accounts.
They allegedly obtained Aadhaar cards for ₹1500 bribe & got bank loans worth lakhs, plus vehicles on EMI pic.twitter.com/2Wo67tZLKX
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 15, 2026
இந்த விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், அந்த போலி ஆவணங்களைக் காட்டி வங்கிகளில் பல லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதோடு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் தவணை முறையில் (EMI) வாங்கியுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள், இவ்வளவு எளிதாக அரசு மற்றும் வங்கி அமைப்புகளை ஏமாற்றிப் பயனடைவது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதோடு, இந்த மோசடிக்கு உதவிய இடைத்தரகர்களையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
