சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சர்பராஸ் கான் காட்டி வரும் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கோவாவிற்கு எதிராக வெறும் 75 பந்துகளில் 157 ரன்களைக் குவித்து அவர் சாதனை படைத்துள்ளார். இதில் 14 சிக்ஸர்களும் அடங்கும். சர்பராஸின் இந்த அபாரமான ஃபார்மைக் கண்டு வியந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “சர்பராஸ் கான் இந்திய அணியின் கதவைத் தட்டவில்லை, மாறாக இடித்து உடைத்துக் கொண்டு உள்ளே வருகிறார்” என்று பாராட்டியுள்ளார். மேலும், சுழற்பந்து வீச்சைத் துவம்சம் செய்யும் சர்பராஸை சிஎஸ்கே அணி தனது ஆடும் லெவனில் (Playing XI) கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
100*(47), 52(40), 64(25), 73(22) in the SMAT.
That form’s transitioned seamlessly into the Hazare with scores of 55(49) followed by a blistering 157(75) today with 14 sixes. It's particularly impressive how he murders spin in the middle overs with his sweeps and slog sweeps.… pic.twitter.com/MfBWAD6QH8
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 31, 2025
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி சர்பராஸ் கானை 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சஞ்சு சாம்சன், எம்.எஸ். தோனி என நட்சத்திர வீரர்கள் அணியில் இருந்தாலும், சர்பராஸின் தற்போதைய ஃபார்ம் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சென்னை சேப்பாக்கம் போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானங்களில், ஸ்பின்னர்களைச் சிறப்பாக எதிர்கொள்ளும் சர்பராஸ் கான் சிஎஸ்கே அணியின் முக்கியத் தூணாக விளங்குவார். அஸ்வின் கூறியது போல, சிஎஸ்கே அணியில் இப்போது திறமையான பேட்டர்கள் அதிகமாக இருப்பதால், யாரைத் தேர்வு செய்வது என்ற ‘இனிப்பான தலைவலி’ அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
