ஹரியானாவில் ஒரு பேருந்து, பைக் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் விபத்துக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் 18 அன்று, மதியம் 1:20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஹரியானா சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தம்பதி பயணம் செய்த பைக் சாலையின் குறுக்கே செல்ல முயன்றது.
பேருந்து மோதும் சில நொடிகளுக்கு முன்பு ஓட்டுநர் பிரேக் பிடித்தாலும், பேருந்து பைக்கின் மீது மோதியது. இந்த மோதலில் பைக்கில் பயணித்த அந்தத் தம்பதி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். விபத்துக்குப் பிறகு பேருந்து நிறுத்தப்பட்டதும், நடத்துநர் மற்றும் பிற பயணிகள் காயமடைந்த தம்பதியினரை நோக்கி விரைந்தனர். அதிர்ஷ்டவசமாக, ஆன்லைன் தகவல்களின்படி, அந்தத் தம்பதி உயிர் பிழைத்தனர் என்று கூறப்படுகிறது.
Bus and Bike Collide at Unmarked Haryana Junction, CCTV Shows Near-Fatal Miss
CCTV from a rural Haryana intersection captures a Haryana Roadways bus moving on what appears to be the main road when a motorcycle cuts across without stopping. The bus brakes hard but the bike is… pic.twitter.com/W5gB3Cj4r3
— SA News Karnataka (@sanewsKarnataka) November 28, 2025
இதற்கிடையில், ராஜஸ்தானின் பிக்கானேரில் ஒரு அதிவேக கார் விபத்துக்குள்ளான மற்றொரு சோகமான சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெள்ளைத் நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, டிராக்டர் டிரெய்லரை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நான்கு முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து, வாகன ஓட்டுநர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. ஒரு தரப்பினர் பேருந்தின் அதிவேகம் தவறு என்று வாதிட்டாலும், மற்றவர்கள் பைக் ஓட்டுநரின் அஜாக்கிரதைதான் விபத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
