நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

அதன் அடிப்படையில் நேற்றிரவு காட்டை விட்டு வெளியேறிய குட்டி கரடி ஒன்று ராணுவ முகாம் பகுதி குடியிருப்புகள் நுழைந்தது. அங்கு சிறிது நேரம் சாலையில் சுற்றித்திரிந்த கரடி அங்கும் இங்கும் ஓடியப்படி விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த சாலையில் வாகனங்கள் சென்ற போதும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அந்த குட்டி கரடி சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றது. ஆனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கரடி நிற்பதை பார்த்து அச்சத்துடன் மெதுவாக சென்றனர்.

பின்பு சாலையின் ஓரமாக இருந்த நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி வேகமாக ஓடி வந்து ஒரு நுழைவாயில் அருகே நின்றது. பின்பு அந்த நுழைவாயிலின் கதவு திறந்த நிலையில் இருந்ததால் அந்த குட்டி கரடி கதவின் மீது ஏறியும் இறங்கியும் மாறி மாறி விளையாடிக் கொண்டே இருந்தது.

சிறிது நேரம் கேட்டின் மேலே ஏறியும் இறங்கியும் விளையாடிக் கொண்டிருந்த கரடியை அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்தனர். சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெயர்களாக பரவி வருகிறது.