சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக கைகளை அறுத்துக் கொண்டு 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கீழ்த் தலத்திலிருந்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

பின்னர் ஜன்னல் வழியாக கீழே குதிக்க அமர்ந்திருந்த பெண்ணை மீரா காப்பாற்றினார். இதையடுத்து அந்தப் பெண் முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சாதுரியமாக காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.