தைவான் நாட்டில் ஒருவர் 32 நாட்கள் விடுமுறையுடன் கூடிய சம்பளத்தை பெறுவதற்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று மூன்று முறை திருமணம் செய்து கொண்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தைவான் நாட்டில் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அதற்காக அவர்களுக்கு 32 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக அந்த நபர் ஒவ்வொரு முறையும் விடுப்பு முடியும் நேரத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து பின்னர் மீண்டும் திருமணம் செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 2020 ஆம் ஆண்டு முதல் அவர் இதுபோன்று செய்து வந்த நிலையில் தற்போது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தன் மனைவியை 37 நாட்களில் 4 முறை திருமணம் செய்துள்ளார். அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் அவர் முதல் முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டு தன் மனைவியை திருமணம் செய்த நிலையில் அதிலிருந்து தான் இந்த ஊழலை செய்து வந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அந்த ஊழியர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.