டெல்லி ஜசோலா அப்பல்லோ பகுதியில், சாலையோரத்தில் ஜாமுன் விற்பனை செய்து வந்த வியாபாரிகளை, ஒரு போலீஸ்காரர் தனது கார் ஜன்னலிலிருந்து கம்பால்  துரத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 50 ரூபாய்க்கு ஜாமுன் வாங்க முயன்றபோது, வியாபாரி பணம்  கேட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வியாபாரிகளை துரத்தினார் என்றும் அந்தக் காணொளியை எடுத்த நபர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோவில், போலீஸ்காரர் தனது காரில் அமர்ந்தபடியே கம்பை  ஏந்தி, வியாபாரிகளை மாடுகள்  போல துரத்துகிறார். இதை பதிவு செய்த நபர், ஜாமுன் விற்பனையாளர்களிடம் நேரில் கேட்டபோது, “பணம் கேட்டதற்காகவே போலீஸ்காரர் துரத்தியதாக” அவர்களே கூறியுள்ளனர். வியாபாரிகளின் வண்டியை மோதியும், அவர்களின் பொருட்களை கீழே தள்ளியும், பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை @gharkekalesh என்ற X  பக்கத்தில் பகிர்ந்த நிலையில், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதைப் பார்த்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து, ஏராளமானோர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் “பலவீனமானவர்களை அடக்குவது எளிது!” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “காவல்துறையினர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்கள், ஆனால் இப்படி நடத்துவது வேதனையளிக்கிறது” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,