திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதில் ராஜகோபால் கொத்தனாராக இருக்கும் நிலையில் தாயும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இதில் ராஜகோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாயாரிடம் தகராறு செய்வார். அந்த வகையில் இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் அவருடைய தாயார் சத்தமிட்டபடியே இருந்தார்.

இதனால் ராஜகோபால் கோபத்தில் தன் தாயாரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.