
கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட் முடித்துவிட்டு பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தையுள்ளது.
அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இந்துமதி மணமுடைந்த நிலையில் இருந்து உள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி தூங்குவதற்காக தனது அறைக்கு சென்றுள்ளார். அதன் பின் நேற்று நேரமாகியும் அவர் வெளியே வராததால் தாய் அவரது அறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.