
அதிமுக கட்சியின் பொது நிகழ்ச்சியில் மாபா பாண்டியராஜனுக்கு அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர் சால்வை அனுவிக்க வந்தார். இதனால் கோபம் அடைந்த ராஜேந்திர பாலாஜி மேடையில் வைத்து அவரின் கன்னத்தில் அறைந்தார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் விருதுநகரில் ஒரு குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுவதாக மாபா பாண்டியராஜன் கூறினார். இதற்கு அவரை மிரட்டும் விதமாக ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்தார்.
அதாவது நான் ஒரு குறுநில மன்னர் தான் என்னை மீறிஅதிமுகவில் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பின்னால் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் போர் வீரர்கள். பாண்டியராஜனுக்கு துணிவிருந்தால் விருதுநகரில் வந்து என்னை பற்றி பேச சொல்லுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியநிலையில் எடப்பாடி பழனிச்சாமியை உடனடியாக பாண்டியராஜன் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி ராஜேந்திர பாலாஜியை கடுமையாக எச்சரித்தார். இதன் எதிரொலியாக நேற்று எடப்பாடி பழனிச்சாமியை ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று சந்தித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம் பாண்டியராஜனுடனுடனான பிரச்சனை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பிரச்சினை முடிந்து விட்டது என்றார். மேலும் எங்களுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிட்டது தற்போது எந்த பிரச்சனையும் கிடையாது என்று நிருபர்களிடம் கூறினார்.