
மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் வாலிபர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் வாலிபரின் குடும்பத்தினரிடம் கூறினர். இதற்காக அதிக பணம் தேவைப்படும், எனவே உடனடியாக ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் தான் சிகிச்சையை தொடங்க முடியும் என்று குடும்பத்தினரிடம் கூறிய நிலையில் அவர்கள் கடன் வாங்கி பணத்தை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த வாலிபர் சாதாரணமாக எழுந்து வெளியே நடந்து வந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர்களிடம் தன்னைப் பிடித்து வைத்திருக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் பணத்தை பிடுங்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர் என கூறினார் .மேலும் மருத்துவமனை ஊழியர்கள் பணத்திற்காக அவர் கோமாவில் இருந்ததாக கூறி நாடகம் ஆடியதாகவும், அந்த வாலிபர் நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளார். இவர் அளித்துள்ள புகாரின்படி தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க