நொய்டாவில் லிப்டில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுவன் லிப்டில் நின்று கொண்டிருந்தான். அந்த லிப்டின் கதவை திறக்கும் போது ஒரு பெண் நாயுடன் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் அந்த சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். ஒரு சில நிமிடங்களில் அந்த பெண் சிறுவனை வெளியே இழுத்து சென்று சரமாரியாக அடித்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பித்து அந்த சிறுவன் மீண்டும் லிப்ட்டுக்குள் வந்துவிட்டான். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்மணியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.