
அண்ணாமலை பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் முதல் கட்டமாக பல்கலைக்கழகத்திற்கு சென்று சம்பவம் நடத்த இடம் மற்றும் சிசிடிவி இருக்க கூடிய இடம் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்தனர். அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஞானசேகரன் பூட்டிருந்த வீடுகளை நோட்டமிட்டு ஜிப்பில் சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதோடு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அதை வீடியோவாகவே எடுத்துள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவர் மீது பள்ளிக்கரணை, அமைந்தக்கரை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. பள்ளிக்கரணையில் நடந்த கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஞானசேகரன் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதில் கடந்த 6 மாத கால் கிறிஸ்டியை காவல் துறையினர் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் ஆய்வகத்தில் அவரது செல்போனை கொடுத்து அதிலிருந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்அப் சேட்டுகளையும் சோதனை செய்து வருகின்றனர்.