நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். உண்மையான சங்கி யார் தெரியுமா.? எங்களையெல்லாம் சங்கி என்று அழைப்பவர்கள் தான். திடீரென மோடியை காலையில் மகனும் மாலையில் அப்பாவும் சந்திக்கிறார்கள்.

அதற்கான சரியான காரணத்தை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. திமுகவை எதிர்த்தாலே சங்கி என்று அழைப்பதா. சங்கி என்று அழைப்பதால் எனக்கு பெருமை தான் என்று கூறினார். மேலும் முதல்வருக்கும் பிரதமருக்கும் கள்ள உறவு கிடையாது. அவர்களுக்கு நேரடியான உறவு தான் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தை சீமான் நேற்று அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்த பிறகு அது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசியல் மற்றும் திரைத்துறை பற்றி நிறைய விஷயங்கள் பேசியதாகவும் அதையெல்லாம் பகிர முடியாது என்றும் சீமான் கூறினார். மேலும் சீமானை சந்தித்த பிறகு ரஜினிகாந்த் சங்கி என்பதற்கு புது விளக்கம் சொன்னது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.