
மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 3 பெண்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது