தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு சார்பில் புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவிகளின் கல்வியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளிகளில் தமிழ் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.