முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர், ‘தொட்டில் குழந்தை திட்டம்’ உருவாக முக்கிய காரணமாக விளங்கினார். அதிமுகவிலிருந்து விலகி 2006ல் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை அடையாறு இல்லத்தில் நடைபெற உள்ளது.
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார்..!!
Related Posts
தமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read moreமும்பையில் விளம்பர பலகை இடிந்து விபத்து…. சென்னையில் அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!
மும்பையில் விளம்பர பதாகை இடிந்து விழுந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால், சென்னையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகரில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பதாகைகள், அதிக உயரத்தில் உள்ள சிறிய பதாகைகள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.…
Read more