அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நான்தான் தலைவன் நான்தான் தலைவன் என ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கொண்டு இருக்கிறது. திருவிழா முடிந்ததும் ஆட்டை பலிகொடுத்து வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவன் பலிகொடுப்பன் என்பதுதான் வரலாறு.

ஆட்டுக்குட்டி ஆயிரம் சிங்க வேஷம் போடலாம். ஆனா இந்த தேர்தல் முடிந்த பிறகு ஆட்டுக்குட்டி மட்டன் பிரியாணி ஆகப்போறது கன்பார்ம் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது கருவேல மரம்தான். அது வளரவே கூடாது அடியோடு வெட்டி எறியணும் என கூறியுள்ளார்.