தூத்துக்குடி வெள்ளம் வந்த போது பிரதமர் வராமல், ஓட்டு கேட்க வந்து போறாரு என்று தான் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்றாரு. நீங்க அதை மறைச்சிட்டீங்க. வெள்ளத்துக்கான உதவி எதுவுமே செய்யல. இதுவரை சல்லி காசும் தரவில்லை என்ற தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த எச். ராஜா,
ஸ்டாலின் சொல்றதெல்லாம் பொய் , பித்தலாட்டம். ஏன்னா சென்னைக்கு 4000 கோடி கொடுத்தது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் தான். அப்போ ராஜ்நாத் சிங் வந்தாரே அவர் மந்திரி இல்லையா ? பிரதமர் வராததை பத்தி கவலை இல்லைங்க. இங்க ஸ்டாலின் எல்லா ஊருக்கு போயிருக்காரா ? உங்க மந்திரி கே.என் நேரு போறார் இல்ல…
மத்த மந்திரியை அனுப்புறீங்க இல்ல… அதனால ஒரு மினிஸ்ட்ரி, ஒரு கவர்மெண்ட். அந்த கவர்மெண்ட் போறது பூராம், அமைச்சர்கள் வந்தால் சர்க்கார் வந்த மாதிரி. ராஜ்நாத் சிங் உடனே சென்னைக்கு வந்தார். கொடுத்த காசை செலவு பண்ணாத திருடர்களின் ஆட்சி இது. நான் சொல்றேன்… ஏன்னா 4000 கோடி சென்னைக்கு மழை நீர் வடிகிறதுக்காக செலவு பன்னுன்னேன்னு சொல்லிட்டு, அதே நேரு 40% தான் பண்ணுனோம்ன்னு சொன்னாரா ? இல்லையா ? இந்த அரசாங்கம் திருடுகின்ற அரசாங்கம். எவ்வளவு 60% திருடுகிற திருட்டு சர்கார்… அதனால நீங்க கணக்க குடுங்க… அதுக்கப்புறம் மீதி கொடுக்கிறோம் என தெரிவித்தார்.