கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “2023- 2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக மொத்த வேலை நாட்களுக்கும் குறையாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, கல்லூரிக்கான இறுதி நாளை முதல்வர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் ஜூன்.19ஆம் தேதி திறக்கப்படும்” என அறிவித்துள்ளார்.