திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த விவசாயி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more