மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் அமைந்துள்ள மைதானம் பரியா. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காண பார்வையாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மைதானத்தை கூட்ட நெரிசல் அதிகமாகி பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைதானத்தில் திடீர் கூட்ட நெரிசல்…. 12 பேர் உயிரிழப்பு…. மடகாஸ்கரில் சோகம்….!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more