மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் அமைந்துள்ள மைதானம் பரியா. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காண பார்வையாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மைதானத்தை கூட்ட நெரிசல் அதிகமாகி பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.