இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு சீனா அதிபர் வந்திருந்தார். இருவரும் சந்தித்து சிறிது நேரம் தனியாக பேசியுள்ளனர். அவர்களது உரையாடல் குறித்து வெளியுறவு செயலர் வினய் மோகன் கூறுகையில், சீன படைகளை இந்தியாவின் லடாக் பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது, இருதரப்பினரும் எல்லைப் பிரச்சனையில் அமைதியை நிலை நாட்டுவதன் முக்கியத்துவம், இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல்லை பிரச்சினையில் அமைதி….. கட்டுப்பாட்டு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்….. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்….!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more