அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த காட்டுத்தியில் பாதிக்கப்பட்டது. இந்தக் காட்டு தீ விபத்தினால் 271 கட்டுமானங்களும் 19000 வீடுகள் கடைகள் போன்றவையும் சேதமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரமும் இந்த காட்டுத்தீயில் கருகி உள்ளது. மீட்பு குழுவினர் இந்த காட்டுத்தீயில் சிக்கிய பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மாயமானவர்களின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது லஹேனா மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து காணாமல் போன 388 பேர் பற்றிய அடையாளத்தை மத்திய புலனாய்வு அமைப்பாளர் எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. இதையடுத்து 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டு தீ விவகாரம்…. 388 பேர் மாயம்…. பெயர் பட்டியல் வெளியீடு….!!
Related Posts
75 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் முகம் இதுதான்….!!!
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்த நிலையில் 75…
Read more6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…
Read more