விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளங்கோ குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது உறுதியானது. அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…
Read more“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!
வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…
Read more