தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
Related Posts
“வருடத்தின் ஒரு நாள் மட்டுமே அற்புத தரிசனம்!”.. பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோவில் நடை திறப்பு..அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!!!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அழகர்கோவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோயிலின் திருக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வரும் ஆடிப் பெளர்ணமி திருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு…
Read more“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more