விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“சொல்லவே முடியாத கொடூரம்… தனிமையில் இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை அழித்த காதல் ஜோடி!”
ஓசூர் அருகே நிகழ்ந்த 13 வயது சிறுவன் கொலை சம்பவம் தற்போது அதிர்ச்சிகரமான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே மாநெட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் விசாரணையின்…
Read moreகிருஷ்ணகிரியை உலுக்கிய 13 வயது சிறுவன் கொலை…! “வாலிபருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி கைது”… அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்…!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது…
Read more