விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…
Read more“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more