விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
FLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!
சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…
Read more“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!
சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…
Read more