விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலனின் மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமலன் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான அமலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
இனிமேல் நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சரியா..? “ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய பெண்”… லேட்டானதால் டெலிவரி ஊழியருக்கு நடந்த அவமானம்… கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்ட சம்பவம்..!
சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில்…
Read moreஅவன சும்மா விடாதீங்க..! “வீடு எங்க ரெண்டு பேர் பேர்லயும் இருக்கு”.. ஆனா நான் தான் செத்துப் போகணுமாம்.. காதல் கணவனின் டார்ச்சர்.. வீடியோ வெளியிட்டு உயிரையே விட்ட பெண்..!
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33). கணினி பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும் செல்வினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…
Read more