கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
FLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!
சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…
Read more“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!
சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…
Read more