கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
அடுத்த அதிரடி..! களம் இறங்கியது.. “10 மணி நேர விசாரணை.. சிக்கிய 20 ஆயிரம் லஞ்சப் பணம்!” – விடிய விடிய நடந்த வேட்டை.. திணறிய ஆபீஸர்கள்..!!
“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக நுழைந்து நடத்திய ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது. அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…
Read moreகாலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…
Read more