மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்க வேண்டிய காவலர் ஒருவரை இப்படி தனியாக நிற்கும் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடலாமா என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மகளிர் ஆணைய உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா பாஜகவின் ஆட்சியில் பாதுகாப்பவர்களை வேட்டையாடுபவர்களாக மாறி உள்ளனர் என்று விமர்சித்துள்ளார். இரவில் தனியாக நிற்கும் பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபடுவதை பார்க்கும் போது அவரின் மனிதாபிமானம் அற்ற செயல் அம்பலமாகிறது. இந்த சம்பவம் வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
Why India has become the most dangerous place for a woman? Even a police molests a woman on the street in MP, India. pic.twitter.com/8u5khfSrNd
— Ashok (@ashoswai) March 8, 2023