புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை காண்பித்து எழுந்து நின்றார். அதனை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம், அவரை அமரும்படி வலியுறுத்தினார். எனினும் எம்எல்ஏ நேரு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.