வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு, முட்டை போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், தற்போது பருப்பு விலையும் உயர்வது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.