டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நசீரை பயங்கர ஆயுதங்களால் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த நசீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.