பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் சரிந்து வருகின்றன. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூபாய் பத்து லட்சம் கோடிக்கு மேல் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் ரூபாய் 12 லட்சத்து 40 ஆயிரத்து 353 கோடியாக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூபாய் 4 லட்சத்து 33 ஆயிரத்து 297 கோடியாக வீழ்ச்சடைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை அடுத்து கோடீஸ்வரர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அதானி 24 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் அதானி குடும்ப பங்கு விளைவுகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐந்து சதவீதம் சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பும் ரூபாய் 51 ஆயிரத்து 525 கோடி வீழ்ச்சடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விளைவுகள் நேற்றும் ஐந்து சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் 50 ஆயிரம் கோடிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. ஜனவரி 24ஆம் தேதி ரூபாய் 19.2 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 9 லட்சம் கோடிக்கு கீழ் சென்று விட்டது.

மேலும் அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூபாய் 34 குறைந்து ரூபாய் 653-ஆகவும் அதானி பவர் பங்கு ரூபாய் 7 குறைந்து ரூபாய் 148 ஆகவும் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு ரூபாய் 56 குறைந்து ரூபாய் 1071 ஆகவும் அதானி கேஸ் ரூபாய் 50 குறைந்து ரூபாய் 1133 ஆகவும் அதானி வில்மர் நிறுவன பங்கும் ரூபாய் 20 குறைந்து ரூபாய் 303 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூபாய் 44 குறைந்து ருபாய் 1674 ஆகவும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு 7 குறைந்து ரூபாய் 336 ஆகவும் ஏசிசி பங்கு விலை நான்கு சரிந்து ரூபாய் 1719 ஆகவும் சரிந்துள்ளது. இதனிடையே அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.