ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அரசாணையில் தெரிவித்தபடி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை என்பது புகாராகும் அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை ஊதிய உயர்வு அமல்படுத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை வலியுறுத்தி வருகின்ற 15-ம் தேதி அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் அவசர காலை சிகிச்சை போன்றவற்றிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.