மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது அவரின் கார் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். பின் ஹரிராம் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த ஹரிராமின் குடும்பத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கினார்.