ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார். மேலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாஜக இதுவரை இடைத்தேர்தலில் தனித்து போட்டியா? அல்லது அதிமுகவுக்கு ஆதரவா? என்று ஒரு சரியான நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.