வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது.

நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு அதன் சேவைகள் எளிதாக கிடைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாதந்தோறும் 27ஆம் தேதி இபிஎஃப் குறை நிவர்த்தி முகாம் நடைபெறுகின்றது. அந்த வகையில் நாகை மாவட்ட சந்தாதாரர்களுக்கு வருகின்ற 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற இருக்கின்றது என்பதை தெரிவித்துள்ளார்.